செய்திகள்
வாலாஜா அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வாலாஜா அருகே குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சரவணன், வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி (வயது 31). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணாதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் அருணாதேவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி தகராறு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் மீது அருணாதேவி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சரவணன், வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி (வயது 31). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணாதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் அருணாதேவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி தகராறு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் மீது அருணாதேவி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.