பொது மருத்துவம்

தினமும் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால்...

Published On 2026-02-06 08:44 IST   |   Update On 2026-02-06 08:44:00 IST
  • தினமும் குறைவாக தூங்குவோருக்கு உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதை அறிந்தும் அறியாமலும் இன்று பலர் தூக்கத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் அலுவலக வேலை அல்லது செல்போன் மோகம் காரணமாக இரவு நீண்ட நேரம் கண் விழித்து இருக்கிறார்கள். ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஆனால், ஒருவர் இரவு சரியாக தூங்கவில்லை என்றால் அவரது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்...

* தினமும் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* தினமும் குறைவாக தூங்குவோருக்கு உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

* ஒருவர் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், பசியைத் தூண்டும் ஹார்மோன் அதிகரிக்கும். அதிகப்படியான பசி காரணமாக கண்ட நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிட நேரலாம். இதனால் உடலில் கொழுப்பு சேரும்.

* ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட ரத்தக்குழாயில் அதிக கொழுப்பு படிவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

* நீங்கள் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்கள் என்றால் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

* ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக தூங்கி வந்தால், மூளையில் நச்சுக்கள் குவியும். பிறகு எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

* நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

* தொடர்ந்து இரவு சரியாக தூங்காதவர்கள், மனச்சோர்வு, கவலை, எதிர்மறையான உணர்வுகள், பயம், அதிக கோபம், மனஅழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும்.

* தூக்கம் வரவில்லை என்று தூக்கமாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பின்னாளில் ஞாபக சக்தி குறைவு ஏற்படலாம்.

* குறைவாக தூங்குபவர்கள் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவார்கள்.

* தினமும் போதிய அளவு தூங்கவில்லை என்றால், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

* நல்ல தூக்கத்தைப் பெற ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள், தினமும் ஒரே நேரத்தில் தூங்குதல், ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என்று ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News