செய்திகள்
பென்னாகரம் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதி 6 குழந்தைகள் படுகாயம்
பென்னாகரம் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஏரியூர் தனியார் பள்ளி உள்ளது. இன்று காலை நாகமரையில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஏரியூருக்கு வந்து கொண்டிருந்தது.
நெருப்பூர் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தி விட்டு குழந்தைகளை ஏற்றி கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் மீது லாரி மோதியது. வேனில் இருந்த 6 பள்ளி குழந்தைகளுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பள்ளி குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.