செய்திகள்
மணப்பாறை அருகே தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை
மணப்பாறை அருகே தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விஜயா(வயது 35). பி.எச்.டி. முடித்துள்ளார். திருமணமாகாத இவர் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். நேற்று காலை அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை கூப்பிட்டு பார்த்தனர்.
எவ்வித பதிலும் வராததால் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, விஜயா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயாவின் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியை விஜயா, என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விஜயா(வயது 35). பி.எச்.டி. முடித்துள்ளார். திருமணமாகாத இவர் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். நேற்று காலை அவரது அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை கூப்பிட்டு பார்த்தனர்.
எவ்வித பதிலும் வராததால் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, விஜயா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயாவின் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியை விஜயா, என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.