செய்திகள்

கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு

Published On 2018-08-09 17:10 GMT   |   Update On 2018-08-09 17:10 GMT
கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்தனர்.

வேலூர்:

வேலூர் மாநகர இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் 60 ஆண்டுகள் பழமையான கும்மாத்தம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான அன்னதான கூடம், விநாயகர் சிலை, அனுமன் சிலை ஆகியவற்றை ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இடித்து விட்டனர்.

மேலும் கோவிலுக்கு பூட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News