செய்திகள்

கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை- விஜயகாந்த் இரங்கல் வீடியோ

Published On 2018-08-08 02:07 GMT   |   Update On 2018-08-08 02:07 GMT
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்ல இரங்கல் தெரிவித்துள்ளார். #கலைஞர் #RIPKarunanidhi
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வீடியோ இரங்கல் செய்தியில் ‘‘கருணாநிதி மறைந்தார் என்பது என்னால் நம்ப முடியவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News