செய்திகள்
ஆட்டையாம்பட்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ஆட்டையாம்பட்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து பேரணியை இன்ஸ்பெக்டர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடு ரோடு, ராசிபுரம் மெயின் ரோடு உள்பட முக்கிய வீதிகள் வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்கள் மெக்கானிக்கல் போலீசாரும், சப்- இன்ஸ்பெக்டர்கள், வாகன ஓட்டிகளும் அணிவகுப்பில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
ஆங்காங்கே பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது.