செய்திகள்
ஏ.டி.எம். எண்ணை பெற்று பெண்ணிடம் பண மோசடி
புதுக்கோட்டையில் பெண்ணிடம் ஏ.டி.எம். எண்ணை பெற்று பணத்தை நூதன முறையில் திருடிய நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவரங்குளம்:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 46). இவர் திருவரங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் ஒருவர் நான் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்களது வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. இதனால் ஏ.டி.எம். எண்ணை கொடுக்குமாறு லட்சுமியிடம் கூறினார்.
இதையடுத்து அவர் வங்கி ஏ.டி.எம். எண்ணை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் 2 தவணையாக லட்சுமி வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மனு கொடுத்துள்ளார். பின்னர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.