செய்திகள்
புதுவையில் தனியார் பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி பலி
புதுவையில் தனியார் பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆரோக்கியதாஸ் தினமும் பஸ்சில் புதுவை வந்து கட்டிட வேலை செய்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று கட்டிட வேலை முடிந்து ஆரோக்கியதாஸ் வீட்டுக்கு செல்ல புதுவை மறைமலை அடிகள் சாலையில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கிய தாஸ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆரோக்கியதாஸ் தினமும் பஸ்சில் புதுவை வந்து கட்டிட வேலை செய்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று கட்டிட வேலை முடிந்து ஆரோக்கியதாஸ் வீட்டுக்கு செல்ல புதுவை மறைமலை அடிகள் சாலையில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கிய தாஸ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.