செய்திகள்

ஜெ. சிகிச்சை ஆவணங்களில் குளறுபடி? - அப்பல்லோ மீது விசாரணை ஆணையம் சந்தேகம்

Published On 2018-07-17 18:03 IST   |   Update On 2018-07-17 18:03:00 IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Jayalalithaa #JayaDeath
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் விசாரணை செய்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசரகதியில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் சந்தேகிக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையின் ஆவண பாதுகாவலரை விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News