செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

Published On 2018-07-11 03:13 GMT   |   Update On 2018-07-11 03:13 GMT
சென்னையில் ஒரு பெண்ணை மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 நபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை:

சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஏரிப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையில் ஒரு பெண்ணை 2 நபர்கள் மிரட்டி வழிப்பறி செய்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து வழிப்பறி ஆசாமிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் பாபு (35), கோபி (48) என்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiRobbers
Tags:    

Similar News