செய்திகள்

மயிலாடுதுறை அருகே விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Published On 2018-07-10 15:13 GMT   |   Update On 2018-07-10 15:13 GMT
மயிலாடுதுறையில் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் வேளாண்மை கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் 2016..2017 ஆண்டு விவசாயிகள் பயிர்காப்பீடு செய்திருந்தனர்.

இதில் மணல்மேடு, கிழாய், கேசீங்கன், நடராஜபுரம் கிராமங்களை சேர்ந்த 270-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.58 லட்சம் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயி செழியன் தலைமையில் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சங்க செயலர் செல்லபாண்டியன் ஒரிருதினங்களில் காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News