செய்திகள்

தஞ்சையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-07-07 17:13 IST   |   Update On 2018-07-07 17:13:00 IST
பொதுமக்கள் புதிதாக அமைக்கப்படும் டாஸ்மாக் கடையை இன்று காலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி 7-வது வார்டு பகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.பின்னர் அந்த டாஸ்மாக் கடை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்ததால் கோர்ட்டு உத்தரவு படி அகற்றப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சுண்ணாம்பு ஓடைப்பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த கடையின் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதிதாக அமைக்கப்படும் டாஸ்மாக் கடையை இன்று காலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News