செய்திகள்

உடன்குடி அருகே பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2018-07-05 17:23 GMT   |   Update On 2018-07-05 17:23 GMT
பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள கொட்டங்காட்டை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கு சொந்தமான பனை மரங்கள் தீவத்தா புரம் என்ற இடத்தில் உள்ளன. இதில் இருந்து பதநீர் இறக்கி கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தை சேர்ந்த பற்குணம் (வயது68). என்பவர் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் அப்பகுதியில் குடில் அமைத்து தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று இவர் பனை ஏறிய போது எதிர் பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். காயம் அடைந்த அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பற்குணம் பரிதாபமாக இறந்தார். 

இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News