செய்திகள்
தஞ்சையில் மு.க.ஸ்டாலின்- திவாகரன் திடீர் சந்திப்பு
தஞ்சையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் மற்றும் திவாகரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். #Dhivakaran #MKStalin
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று நடந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளருமான திவாகரன் கலந்து கொண்டார். இதே திருமணத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்று விட்டார்.
சென்னை- சேலத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு விடாப்பிடியாக செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக முதல்- அமைச்சருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். அதில் மக்கள் கருத்தை கேட்டு மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றும் படி தெரிவித்துள்ளேன். இந்த திட்டம் தொடர்பாக மக்களிடம் பேசிவிட்டு மக்களின் சம்மதத்தை பெற்று செயல்படுத்த வேண்டும்.
மேலும் எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை சரியாக ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவதால் அவர்களின் கருத்தை கேட்டு அதன்படி அரசு செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வது முறையற்ற செயல் ஆகும். காவல்துறை முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் தோறும் அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்து வருகிறது. மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் எனது மகன் ஜெயானந்த் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #MKStalin #ChennaiSalemGreenExpressWay
தஞ்சையில் இன்று நடந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச்செயலாளருமான திவாகரன் கலந்து கொண்டார். இதே திருமணத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்து பேசினர். இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்று விட்டார்.
பின்னர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
மேலும் எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை சரியாக ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவதால் அவர்களின் கருத்தை கேட்டு அதன்படி அரசு செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வது முறையற்ற செயல் ஆகும். காவல்துறை முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் தோறும் அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்வு நடந்து வருகிறது. மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் எனது மகன் ஜெயானந்த் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #MKStalin #ChennaiSalemGreenExpressWay