செய்திகள்

உச்சிப்புளியில் பைபர் படகுடன் இலங்கை வாலிபர் ஊடுருவல் - போலீசார் விசாரணை

Published On 2018-06-27 07:16 GMT   |   Update On 2018-06-27 07:16 GMT
உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி கடற்கரை பகுதியில் பைபர் படகில் வந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள், தங்கம் போன்றவை கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.

இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அவ்வப்போது அகதிகளாக சிலர் கள்ளத்தோணியில் ராமேசுவரத்திற்கு வருவதுண்டு.

நேற்று உச்சிப்புளி அருகே உள்ள வலங்காபுரி கடற்கரை பகுதியில் பைபர் படகில் 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார். அவர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அவர்கள், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இலங்கையைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் சகாயபஸ்டீபன் என்ற காண்டீபன் எனவும், இவர் சட்ட விரோதமாக பைபர் படகில் வந்தது தெரிய வந்தது.

அவர் கடத்தலுக்காக வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Tags:    

Similar News