செய்திகள்

ரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

Published On 2018-06-20 06:08 GMT   |   Update On 2018-06-20 06:08 GMT
தமிழகத்தில் 5 இடங்களில் செய்யப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து மதுரையில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
சென்னை:

நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை 5 மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக செங்கல்பட்டு, மதுரை, செங்கிபட்டி, பெருந்துறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.



இதையடுத்து, மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியினை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 750 படுக்கை அறைகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் நர்சிங் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகப்பட உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
Tags:    

Similar News