செய்திகள்

மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கில் ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணிகள் - எம்.எல்.ஏ. தகவல்

Published On 2018-06-18 12:22 GMT   |   Update On 2018-06-18 12:22 GMT
மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கில் ரூ.2 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை நகராட்சி ஆனதாண்டபுரம் செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நகராட்சியில் எடுக்கபடும் குப்பைகளை இங்கு 50 ஆண்டுகாலமாக கொட்டபட்டு மலை போல் குவிக்கப்பட்டு உள்ளது. இதை தரம் பிரித்து ரீசைக்கிளிங் முறையில் பயன்படுத்தபட்டு வந்தது. இதை சுற்றி 20-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு அடிக்கடி தீ பற்றுவதால் இதிலிருந்து எழும் புகையால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் குப்பை கிடங்கை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதனை அடுத்து தமிழ்நாடு நகராட்சி இயக்குனரக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி குப்பை கிடங்கு மேம்பாட்டுக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைகொண்டு குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து உரமாகவும் கழிவுகளை சாலை அமைக்க அனுப்பப்படும்.

இப்பணி தொடரும் பட்சத்தில் குப்பை சேருவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிடங்கை சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News