செய்திகள்

மதுரை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்: கடத்தப்பட்டாரா?

Published On 2018-06-13 10:35 GMT   |   Update On 2018-06-13 10:35 GMT
கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயமானதால் அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சாந்தி (வயது 28). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சாந்தி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி சாந்தி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News