செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் இருவர் பணியிட மாற்றம்

Published On 2018-06-08 12:35 GMT   |   Update On 2018-06-08 12:35 GMT
கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக போலீசாரின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #ThoothukudiShooting
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசாரின் எப்.ஐ.ஆரில், துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் சேகர் ஆகியோரின் உத்தரவின் பெயரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எப்.ஐ.ஆரிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் மாற்றி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News