செய்திகள்

நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 4-வது முறையாக தள்ளுபடி

Published On 2018-06-06 06:16 GMT   |   Update On 2018-06-06 06:16 GMT
பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக தள்ளுபடி செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi
விருதுநகர்:

மாணவிகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நிர்மலாதேவி சார்பில் சாத்தூர் கோர்ட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறையும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


இந்த நிலையில் 4-வது முறையாக ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நேற்று இதே நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #Nirmaladevi
Tags:    

Similar News