செய்திகள்
சிவகங்கை அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
சிவகங்கை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் மீது கார் மோதிய விபத்தில் மாணவர் பலியானார்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த எறும்புகுடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 19). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். இந்தநிலையில் சிவகங்கையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்திற்கு சதீஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிவகங்கையை அடுத்த வாணியங்குடி என்ற இடம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையை அடுத்த எறும்புகுடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 19). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். இந்தநிலையில் சிவகங்கையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்திற்கு சதீஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிவகங்கையை அடுத்த வாணியங்குடி என்ற இடம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.