செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- தாய்-கள்ளக்காதலன் கைது

Published On 2018-06-02 10:16 GMT   |   Update On 2018-06-02 10:16 GMT
வாடிப்பட்டி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தாய்- கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், இவரது மனைவி உமாராணி (வயது 29) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் உமா ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி (22) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சிவமூர்த்தி உமாராணியின் மகளையும் பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் சிறுமி தனது அத்தை நல்லம்மாள் தேவியிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதாள்.

இந்நிலையில சிவமூர்த்தி அந்த சிறுமியை திருமணம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு உமாராணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு நல்லம்மாள் தேவியை சிவமூர்த்தியும் உமாராணியும் மிரட்டினர்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரெஜினா, போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் உமாராணி, கள்ளக்காதலன் சிவமூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
Tags:    

Similar News