செய்திகள்

ஆனைமலை அருகே பால்கனியில் இருந்து தூக்கத்தில் தவறிவிழுந்த வாலிபர் பலி

Published On 2018-06-02 15:02 IST   |   Update On 2018-06-02 15:02:00 IST
ஆனைமலை அருகே பால்கனியில் இருந்து தூக்கத்தில் தவறிவிழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் தூக்கத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வடிவேலன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News