செய்திகள்

கோவில் விழாவில் ராணுவ வீரர் மீது உருட்டுக்கட்டை தாக்குதல்: 8 பேர் கைது

Published On 2018-05-31 15:56 GMT   |   Update On 2018-05-31 15:56 GMT
கோவில் விழாவில் ராணுவ வீரர் மீது உருட் டுக்கட்டையால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பாண்டிமாரி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 25). ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முத்துப்பாண்டி சோழவந்தான் மாரியம்மன் கோவில் விழாவில் குடும்பத்துடன் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் காரைக்கடை தெருவில் அக்னிசட்டி ஊர்வலத்தில் சென்றபோது சிலர் முத்துப்பாண்டியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் முத்தப்பாண்டிக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது.

தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்ட முத்துப் பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை தாக்கிய மாரிக்கனி (20), ராம்குமார், மதி, தினேஷ், பிரபாகரன், அங்குச்சாமி, ஆலயமணி, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News