செய்திகள்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு

Published On 2018-05-26 00:00 GMT   |   Update On 2018-05-26 00:00 GMT
பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மரணத்தின் எதிரொலியாக, 20க்கு மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #PMK #KaduvettiGuru
விழுப்புரம்:

சென்னையில் நீரிழிவு நோயால் சிகிச்சை பெற்று வந்த பாமக தலைவர் காடு வெட்டி குரு, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதன் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேற்று இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூரில் இயங்கி வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் சேதமாகின.

இதனால் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே, அந்தந்த மாவட்டங்களில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து கண்ணாடிகள் உடைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews 
Tags:    

Similar News