செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் - இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-24 10:35 GMT   |   Update On 2018-05-24 10:35 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இது வரை 13 பேர் பலியாகி விட்டார்கள்.

இதைகண்டித்து தமிழ்நாடு முழுவதும் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரையும் அரசையும் கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி பஸ் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும்,போலீசாரை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பேரணி நடத்திய பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News