செய்திகள்
துப்பாக்கி சூட்டை கண்டித்து சத்தியமங்கலத்தில் சாலை மறியல்: 32 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம்:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.
சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.