செய்திகள்

மெரினாவில் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் கைது

Published On 2018-05-20 13:31 GMT   |   Update On 2018-05-20 13:31 GMT
சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் பேரணியில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
சென்னை:

இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

ஆனால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி எனும் பெயரில் தடையை மீறி ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. 

இதற்கிடையே, மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தடையை மீறி மெரினா செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
Tags:    

Similar News