செய்திகள்

திருப்போரூரில் குடிநீர் தொட்டிக்குள் காவலாளி பிணம் - அடித்து கொலையா?

Published On 2018-05-17 15:37 IST   |   Update On 2018-05-17 15:37:00 IST
திருப்போரூரில், புதிதாக கட்டப்படும் வரும் அடுக்குமாடி குடியிருப்பின் குடிநீர் தொட்டிக்குள் காவலாளி பிணமாக மிதந்ததால், அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:

நாவலூரை அடுத்த தாழம்பூரில் 28 மாடி கொண்ட புதிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 34) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு அவர் பணியில் இருந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியின் மேல் நாற்காலியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நள்ளிரவில் குடிநீர் தொட்டிக்குள் சிவக்குமார் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு காவலாளி தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி காவலாளி சர்க்கரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறும் போது, ‘நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவக்குமார் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் அவரை மீட்ட போது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சிவக்குமார் காவல் பணியில் இருந்த போது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குடிநீர் தொட்டியில் தள்ளி விட்டனரா? என்பது குறித்து தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News