செய்திகள்

ராயபுரத்தில் போலீஸ் குடும்ப பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் கொள்ளை

Published On 2018-05-17 15:26 IST   |   Update On 2018-05-17 15:26:00 IST
ராயபுரத்தில் பட்டப்பகலில் போலீஸ் குடும்ப பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் கொள்ளைப் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் கவிதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது நகைகளை அடகு வைக்க ஜி.ஏ.ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார்.

பகல் 12.40 மணியளவில் நகைகளை அடகு வைத்து ரூ.1¼ லட்சத்துடன் வெளியே வந்தார். அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிள் டிக்கியை திறந்து அதற்குள் வைத்து பூட்டினார்.

பின்னர் மேலும் பணம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு பணத்தை எடுத்து கொண்டு வெளியே வருவதற்குள் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

திரும்பி வந்த கவிதா கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அடமான பணத்தை பறிகொடுத்ததை நினைத்து அவர் அழுது புரண்டார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். உடனடியாக ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

பட்டப்பகலிலேயே இப்படி பின் தொடர்ந்து கொள்ளையடித்து பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை பறிகொடுத்த கவிதாவின் உறவினர்கள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News