செய்திகள்

மதுரையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2018-05-16 15:16 IST   |   Update On 2018-05-16 15:16:00 IST
மதுரையில் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை தமுக்கம் மைதானம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தது.

பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை.

இதற்குள் அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டமும் வருவதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.

இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்தப்பகுதி மக்கள் வங்கிக்கும், தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏ.டிஎம். மையத்தை ஆய்வு செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News