செய்திகள்

காரைக்குடி அருகே கார் மீது மொபட் மோதி வாலிபர் பலி - டிரைவர் கைது

Published On 2018-05-15 09:52 GMT   |   Update On 2018-05-15 09:52 GMT
மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை:

காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் அழகு (வயது 39). இவர் நேற்று மாலை தனது மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

செட்டிநாடு அருகே உள்ள வடுகனேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து வந்த கார் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அழகு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அழகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாபன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பொன்னம்பலம் (50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News