செய்திகள்
கொள்ளை நடந்த வங்கி ஊழியர் வீட்டை படத்தில் காணலாம்.

வத்தலக்குண்டுவில் வங்கி ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2018-05-14 05:52 GMT   |   Update On 2018-05-14 05:52 GMT
வத்தலக்குண்டுவில் வங்கி ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு ஊர்காலசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. சித்தையன்கோட்டையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கிளார்க்காக உள்ளார். அவரது மனைவி தேன்மொழி. பழைய வத்தலக்குண்டுவில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் வசிக்கும் வீடு 2 மாடிகள் கொண்டது.

நேற்று இரவு சின்னசாமி மனைவி, 2 குழந்தைகளுடன் கீழ் வீட்டில் தூங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்தார். நள்ளிரவு சமயம் நைசாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். மாடி வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை சுருட்டி கொண்டு கீழ் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த பீரோவை நைசாக திறந்து அதில் இருந்த நகையை எடுத்து கொண்டு தலைமறைவானார்கள்.

இன்று காலை எழுந்து பார்த்த சின்னசாமி வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை பார்த்த போது அதில் இருந்த 12 பவுன் நகையை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மாடி வீட்டுக்கு சென்று பீரோவை பார்த்தார். அப்போது அதில் 20 நகை மற்றும் பணம் கொள்ளை போனது கண்டு பதறி போனார்.

இதுகுறித்து சின்னசாமி வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News