செய்திகள்

கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

Published On 2018-05-11 05:42 GMT   |   Update On 2018-05-11 05:42 GMT
பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பூந்தமல்லி:

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் கருணாநிதி மகள் செல்வி மற்றும் செல்வியின் மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது கடந்த 2009-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் பனையூரில் உள்ள அவர்களது நிலத்தை என்னிடம் விற்க ஒப்பந்தம் செய்தனர். அதற்காக ரூ.4½ கோடியை முன் பணமாக கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமல் வேறு நபருக்கு விற்றுவிட்டனர். நான் முன்பணமாக கொடுத்த ரூ.4½ கோடியை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்தனர்.

அதனால் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். இவ்வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண்.1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி குருலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி மகள் செல்வி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

வழக்கை விசாரித்த நீதிபதி குருலட்சுமி வருகிற 25-ந் தேதி செல்வியை மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். #Tamilnews
Tags:    

Similar News