செய்திகள்
செல்லூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- அண்ணன்-தம்பி கைது
செல்லூர் அருகே வீட்டு தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
செல்லூர் கொன்னவாயன் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 39). இவர்களுக்கு சொந்தமான வீட்டை சாகுல்ஹமீது (40), அவரது தம்பி சுல்தான் ஆகியோர் ஒத்திக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.
அதற்கான தவணை காலம் முடிந்ததும் வீட்டை காலி செய்வது தொடர்பாக அவர்களுக்கும், ராஜலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த விரோதத்தில் சாகுல்ஹமீது மற்றும் சுல்தான் அரிவாளால் வெட்டியதில் ராஜலட்சுமி காயம் அடைந்தார்.
இது குறித்து செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்ஹமீது, சுல்தானை கைது செய்தனர்.#tamilnews
செல்லூர் கொன்னவாயன் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 39). இவர்களுக்கு சொந்தமான வீட்டை சாகுல்ஹமீது (40), அவரது தம்பி சுல்தான் ஆகியோர் ஒத்திக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.
அதற்கான தவணை காலம் முடிந்ததும் வீட்டை காலி செய்வது தொடர்பாக அவர்களுக்கும், ராஜலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த விரோதத்தில் சாகுல்ஹமீது மற்றும் சுல்தான் அரிவாளால் வெட்டியதில் ராஜலட்சுமி காயம் அடைந்தார்.
இது குறித்து செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்ஹமீது, சுல்தானை கைது செய்தனர்.#tamilnews