செய்திகள்

திருப்புவனம் அருகே 7-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து பலி

Published On 2017-12-30 10:35 IST   |   Update On 2017-12-30 10:35:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர் மறுத்ததால் 7-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகள் அபினயா (வயது13). இவர் மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சக்கிமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அபினயா கூறினார். அதற்கு பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் அபினயா விரக்தியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் அபினயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபினயா பரிதாபமாக இறந்தார்.

பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News