செய்திகள்
மயிலாடுதுறை அருகே கார் மோதி பெயிண்டர் பலி
மயிலாடுதுறை அருகே சாலையை கடக்க முயன்ற பெயிண்டர் மீது கார் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மெயின் ரோட்டில் வசிப்பவர் குலோத்துங்கன் (வயது 58). பெயிண்டர்.
இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து கடைத் தெருவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் சாலையை கடந்த போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குலாத்துங்கன் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் பலியான குலோத்துங்கனுக்கு சகாயமேரி என்ற மனைவியும், ஸ்ரீதர் இன்பன்ட் என்ற மகனும் உள்ளனர். இதுகுறித்து குத்தாலம் போலீசில் சகாயமேரி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.