செய்திகள்

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயம்

Published On 2017-12-13 10:27 GMT   |   Update On 2017-12-13 10:27 GMT
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் 3 பேர் மாயமானதால் அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தழூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகள் ஆர்த்தி (வயது19) அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவரது தோழியான வழூவூர் பகுதியை சேர்ந்த ராதிகா (20). இவர்கள் 2 பேரும் கடந்த 11-ந் தேதி கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்றனர். அதன்பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினர். அவர்கள் கிடைக்காததால் இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர் அதன் பேரில் போலீசார் மாயமான ஆர்த்தி மற்றும் ராதிகாவை தேடி வருகின்றனர்.

இதே போல் மணல்மேடு அருகே மேல மருதாந்த நல்லூர் பகுதியை சேர்ந்த செல்லையா என்பவரது மகள் விஜயலெட்சுமி (18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் சம்பவத்தன்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது பெற்றோர் மணல்மேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News