செய்திகள்

குத்தாலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-14 18:14 IST   |   Update On 2017-11-14 18:14:00 IST
குத்தாலம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி செபஸ்தியார்கோவில் பகுதியில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆடுதுறை-மங்கைநல்லூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திருமாறன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 15 நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 15 நாட்கள் கடந்தும் டாஸ்மாக் கடை மூடப்படாததால், கிராம மக்கள் குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாளை (15-ந்தேதி) டாஸ்மாக் மண்டல மேலாளர் முன்னிலையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் தாசில்தார் திருமாறன் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Similar News