செய்திகள்

வைத்தீஸ்வரன் கோவிலில் 170 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2017-11-11 17:44 IST   |   Update On 2017-11-11 17:44:00 IST
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை பி.வி.பாரதி எம்.எல்.ஏ வழங்கினார்.

சீர்காழி:

சீர்காழி பகுதியில் தொடர்ந்து கனமழை 12 நாட்களுக்கு மேல் பெய்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள கோவிலார் வடிவாய்க்கால், திருநகரி வாய்க்கால் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டு விளக்கு முகத்தெரு,தெற்குவெளி, ரெயிலடி தெரு, தாமரைக்குளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பி.வி.பாரதி எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை தனது சொந்த நிதியில் வழங்கினார். பாதிக்கப்பட்ட 170 குடும்பங்களுக்கு தலா 10கிலோ அரிசி, போர்வைகள், பிரட், பிஸ்கெட் ஆகியவைகள் வழங்கப்பட்டன.அப்போது அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் செல்லையன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம்,பேரூர் செயலாளர் போகர்.ரவி,நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலர் ஏ.வி.மணி, நிர்வாகிகள் சுகுமார், திருமாறன் உடனிருந்தனர்.

Similar News