செய்திகள்
சீர்காழி அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
சீர்காழி அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மகேந்திர பள்ளி கிராமம், பவுசுபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 26). இவர் கோட்டையன் மேடு பகுதி கண்டங்காடு பகுதியில் சாராயம் விற்பதாக புதுப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது சதீஸ் சாராயம் விற்றது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
மேலும சதீஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இதனால் நாகை போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் சதீசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சதீஸ் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.