செய்திகள்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-10 22:05 IST   |   Update On 2017-11-10 22:06:00 IST
மத்திய அரசின் உயர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக கடைபிடித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்:

மத்திய அரசின் உயர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக கடைபிடித்து காங்கிரஸ் சார்பில் வேதாரண்யம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சிவபிரகாசம், மகளிரணி செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கருப்பு பணம் ஒழிந்ததா? கள்ளப் பணம் ஒழிந்ததா? என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் உயர் மதிப்பு பணம் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து மருதூர் கணேசன் விளக்கி பேசினார். இதில் தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

Similar News