செய்திகள்

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-11-09 21:43 IST   |   Update On 2017-11-09 21:43:00 IST
தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செய்ல்பட வேண்டும் என பிரதமர் மோடி - திமுக தலைவர் கருனாநிதி சந்திப்பு குறித்தான கேள்விக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
நாகை:

கடந்த வாரம் தினந்தந்தி பவளவிழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த போது பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் இது தொடர்பாக கூறியதாவது:-

கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது, திமுக கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகதான். ஸ்டாலின் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.

காவல்துறை அ.தி.மு.க அல்லது பா.ஜ.க கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற ஐயம் எழுகிறது.  தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News