செய்திகள்

காரைக்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2017-10-07 10:36 IST   |   Update On 2017-10-07 10:36:00 IST
டெங்கு காய்ச்சலுக்கு காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்த பெண் பலியானார். இதுகுறித்து சங்கரா புரத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது38), கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (30).

கணவன்-மனைவி இருவரும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 2-ந்தேதி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த போது முத்துமாரிக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்துமாரி பரிதாபமாக இறந்தார். மாரிமுத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சங்கரா புரத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News