செய்திகள்
கடலூரில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற கல்லூரி மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் முதுநகர் வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கற்பகவல்லி (வயது20).இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டுபடித்து வருகிறார்.
நேற்று மாலையில் அவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் கவலை அடைந்த முத்து மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் கற்பகவல்லியை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி எங்கு சென்றார் என தேடி வருகிறார்கள்.