செய்திகள்

அணுமின்நிலைய ஊழியர் கொலையில் தொழிலாளி கைது

Published On 2017-08-11 06:47 GMT   |   Update On 2017-08-11 06:47 GMT
அணுமின்நிலைய ஊழியர் கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலைய ஆராய்ச்சி மையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் ஆண்ட்ரூஸ் ராஜய்யா (52). நேற்று காலை அவர் கல்பாக்கத்தை அடுத்த இளையனார் குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விசாரணையில் மதுக் கடை அருகே காலி பாட்டில்களை எடுத்து விற்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் ஆண்ட் ரூஸ் ராஜய்யாவை கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தன்னை தரக்குறைவாக பேசியதால் ஆன்ட்ரூஸ் ராஜயாவை ஆத்திரத்தில் கொலை செய்ததாக பூபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News