செய்திகள்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்
வேதாரண்யம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள தோப்பு துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் நிதி மித்ரன் (வயது 3) இவன் ரோட்டோரம் விளையாடி கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவனை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம் அருகே உள்ள தோப்பு துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் நிதி மித்ரன் (வயது 3) இவன் ரோட்டோரம் விளையாடி கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவனை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.