செய்திகள்

கொள்ளிடம் அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை

Published On 2017-04-28 21:39 IST   |   Update On 2017-04-28 21:39:00 IST
கொள்ளிடம் அருகே குடும்ப பிரச்சினையில் ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சீர்காழி:

கொள்ளிடம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பானுமதி (வயது 52) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், பானுமதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பானுமதி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கிருஷ்ணமூர்த்தியும் படுகாய மடைந்தார்.

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பானுமதி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணமூர்த்தி முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வறுகிறார்.

இதுபற்றிய  புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News