செய்திகள்

செந்துறையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2017-04-13 15:18 IST   |   Update On 2017-04-13 15:18:00 IST
ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை:

ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் செந்துறை ஊராட்சியில் ஏலம் விடப்பட்ட வாரச்சந்தை ஏலத்தை உடனடியாக ரத்து செய்திடவும், பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, கழிவறை கட்டகோரியும், 100 நாள் வேலையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கிடவும்

100 பணியாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடக் கோரியும், பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள சித்தேரியை சுற்றி கம்பி வேலை அமைத்து பாதுகாத்திட கோரியும், வாரச்சந்தைக்கு தனியாக இடம் ஒதுக்கி கடைகள் கட்டி முறையாக குடிநீர், மின்விளக்கு, கழிவறை போன் வசதிகளை செய்து தரகோரியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணை செயலாளர் கருப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரவளவன், தெற்கு தலித் வெற்றி, மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம்,சேகர், இராஜேந்திரன், தீரவளவன், மற்றும்

200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News